ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்!

Published:

eid mubarak - 2026

இஸ்லாமியரின் பண்டிகையான ஈத் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரம்ஜான் வாழ்த்தில், இந்த நாளில் சமூகத்தில் ஒற்றுமையின் இணைப்பு, வலிமையாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அதுபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை குடும்பங்களுக்கு இந்தப் பண்டிகை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

ஈகைத் திருநாள் என அழைக்கப்படும் ஈத் பண்டிகை, இன்று கொண்டாடப் படுகிறது. பிறை தெரிந்ததாக தலைமை காஜி அறிவித்ததை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img