முடங்கிக் கிடக்கும் மார்பிள் தொழில்…!

marble
marble

மதுரை: மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், மார்பிள் கற்கள் விற்கும் நிலையங்கள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன.

மதுரை நகரிலும், புறநகர் பகுதிகளான கருப்பாயூரணி, வரிச்சூர், ஓடைப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்பிள் கடைகள் திறக்கப்பட்டு, பல நாட்கள் ஆகியும், விற்பனையானது மந்தமாகவே உள்ளதாம்.

மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் யாவும் உள்ளூர் பணி்யாட்களைக் கொண்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கிடைககாவிட்டாலும், எம் சாண்டை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளும், செங்கல் தயாரிக்கும் தொழில்களும், மதுரை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகின்றன.

கருப்பாயூரணியில் எம்.சாண்டை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் சோழவந்தான், மேலூர், திருமங்கலம் வட்டாரங்களில் செங்கல் சூளை பணியானது, குறைவான ஆட்களை வைத்து நடைபெறுகிறது.

கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தாலும், மதுரை நகரை பொறுத்த மட்டில், புதிய வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

பீகார், ஓடிசா, உத்திரபிரதேச மாநில தொழிலாளர்களை வைத்து பல இடங்களில் ஆழ்துளை அமைக்கும் பணியானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது ஆழ்துளை அமைக்கும் பணியும், மும்முரமாக நடைபெறவில்லை.

marble
marble

இது குறித்து போர்வெல் அமைக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர் கூறியது: மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லையென்றும், அன்றாட தேவைக்கு மக்கள் சிரமப் படுவதால், வீடுகள், நிலங்களில் ஆழ்துளை அமைக்க மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், இருந்தபோதிலும், மக்கள் அழைத்தால், நாங்கள் போர்வெல் அமைக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.

டைல்ஸ் விற்பனையாளர்கள் கூறியது: வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், தற்போது பூச்சு வேலை மற்றும் நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் மந்தம், மற்றும் மக்கள் கையிருப்பு போதிய அளவு இல்லாததாலும், டைல்ஸ் வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டைல்ஸ் வியாபாரம் பழைய நிலைக்கு வருவதற்கு, இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்றனர். மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் டைல்ஸ் விற்பனையானது மந்தநிலையிலேதான் உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories