முடங்கிக் கிடக்கும் மார்பிள் தொழில்…!

marble
marble

மதுரை: மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், மார்பிள் கற்கள் விற்கும் நிலையங்கள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன.

மதுரை நகரிலும், புறநகர் பகுதிகளான கருப்பாயூரணி, வரிச்சூர், ஓடைப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்பிள் கடைகள் திறக்கப்பட்டு, பல நாட்கள் ஆகியும், விற்பனையானது மந்தமாகவே உள்ளதாம்.

மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் யாவும் உள்ளூர் பணி்யாட்களைக் கொண்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கிடைககாவிட்டாலும், எம் சாண்டை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளும், செங்கல் தயாரிக்கும் தொழில்களும், மதுரை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகின்றன.

கருப்பாயூரணியில் எம்.சாண்டை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் சோழவந்தான், மேலூர், திருமங்கலம் வட்டாரங்களில் செங்கல் சூளை பணியானது, குறைவான ஆட்களை வைத்து நடைபெறுகிறது.

கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தாலும், மதுரை நகரை பொறுத்த மட்டில், புதிய வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பீகார், ஓடிசா, உத்திரபிரதேச மாநில தொழிலாளர்களை வைத்து பல இடங்களில் ஆழ்துளை அமைக்கும் பணியானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது ஆழ்துளை அமைக்கும் பணியும், மும்முரமாக நடைபெறவில்லை.

marble
marble

இது குறித்து போர்வெல் அமைக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர் கூறியது: மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லையென்றும், அன்றாட தேவைக்கு மக்கள் சிரமப் படுவதால், வீடுகள், நிலங்களில் ஆழ்துளை அமைக்க மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், இருந்தபோதிலும், மக்கள் அழைத்தால், நாங்கள் போர்வெல் அமைக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.

டைல்ஸ் விற்பனையாளர்கள் கூறியது: வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், தற்போது பூச்சு வேலை மற்றும் நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் மந்தம், மற்றும் மக்கள் கையிருப்பு போதிய அளவு இல்லாததாலும், டைல்ஸ் வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டைல்ஸ் வியாபாரம் பழைய நிலைக்கு வருவதற்கு, இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்றனர். மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் டைல்ஸ் விற்பனையானது மந்தநிலையிலேதான் உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories