தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவர் உயிரிழந்தார்.
கம்பத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த இவர், கடந்த ஜூலை 17-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.