சாத்தான்குளம் விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி!

Published:

sathankulam-ins-sridhar
sathankulam-ins-sridhar
  • சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.
  • முதுகு வலி காரணமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஸ்ரீதர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை : சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதுகு வலியால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் மரண வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என்பவருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார்.

இதை அடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் பாதுகாப்புடன் இன்று பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img