spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்இப்போ வேண்டாம்: தம்பதிகளுக்கு அட்வைஸ் தந்த அரசு!

இப்போ வேண்டாம்: தம்பதிகளுக்கு அட்வைஸ் தந்த அரசு!

- Advertisement -
karppam
karppam

ஆஸ்பத்திரிகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிவதாலும், கர்ப்பிணிகளுக்கும் தொற்று அதிகமாக பரவிவிடுவதாலும், இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது. அதன்படி கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்றும் அதை தள்ளிப்போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

உலக அளவில் உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனாவின் 2வது அலை பரவல். ஒட்டுமொத்த உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து அதன்கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களும் முடிந்தவரை விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள். எனினும் சில நாடுகள் மோசமாக சிக்கி கொண்டிருக்கின்றன. அதிலும் பிரேசில் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் கொத்து கொத்தாக மடியும் உயிரிழப்புகளை தடுக்க போராடி வருகிறது. அதாவது ஒருநாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரைக்கும் அதுபோல 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது இந்த கொரோனா.

இதில் அதிக அளவு பாதிக்கப்படுவது, பிறந்த பச்சிளம் குழந்தைகள்தானாம்.. அப்போதுதான் பிறக்கின்றன. அப்போதே இறந்தும் விடுகின்றன. பிறந்த குழந்தை கண்ணை சரியாக திறப்பதற்கு முன்பே இறந்து போவது அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்து வருகிறது. அதனால் தான் சுகாதாரத்துறை ஒரு முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவை அட்வைஸாக அந்நாட்டு பெண்களுக்கும் வழங்கி உள்ளது.

அதன்படி, கருவுருவதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமாறு கேட்டு கொண்டுள்ளது. ஏனென்றால், ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறார்கள்.. இந்த சூழலில், பிரசவத்துக்காக கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அப்படி அனுமதிக்கப்படும்போது, நன்றாக இருக்கும் அவர்களுக்கும் தொறுறு எளிதாக பரவிவிடுகிறதாம்.. இது வயிற்றில் உள்ள குழந்தையையும் டைரக்ட்டாக அட்டாக் செய்கிறதாம்..

கடந்த வருடம் இந்த மாதிரி நிலைமை இல்லை.. பிரசவத்தின்போது மட்டுமே அந்த பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்.. இப்போது கர்ப்பம் அடைந்த கொஞ்ச நாளிலேயே குழந்தைக்கும் பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது.

அதுவும் இந்த 2வது அலை பயங்கரமான ஆபத்தை தருவதால், கர்ப்பிணிகள் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்களாம்.. இந்த கொரோனா பரவல் குறையும் வரை, கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அட்வைஸ் தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe