29-03-2023 12:32 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஒவ்வொரு கணமும் மரணமே.. பரமனை நாடு மனமே!

    To Read in other Indian Languages…

    ஒவ்வொரு கணமும் மரணமே.. பரமனை நாடு மனமே!

    narather
    narather

    ஒரு முறை நாரத மகரிஷியிடம் இல்லறத்தான் (குடும்பவாசி) ஒருவர், “” அய்யா சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?” என்று கேட்டார்.

    நாரத மகரிஷி அவரிடம்,”” என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக்
    கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!” என்றார்.

    “ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?” என்றார் பக்தர்.

    “”ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்” என்றார் நாரத மகரிஷி.

    இதைக் கேட்டு, “”சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?’ என்று அதிர்ந்தார்.

    ஆம்..” என்றார் நாரத மகரிஷி. பீதியடைந்த பக்தரும், தினமும் பகவான் நாம சங்கீர்த்தனம், பஜனை, எளியோர்க்கு தொண்டு, என குடும்ப மகிழ்ச்சியோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஒருவாரம் கடந்தது.

    “இன்று தான் கடைசிநாள்.
    எனவே ஒருமுறை மீண்டும் நாரத மகரிஷியினை தரிசிக்கலாம்,” என்று புறப்பட்டார்.

    கண்ணீர் மல்கியபடி, “”சுவாமி” என்று பாதத்தில் விழுந்தார்.
    “”இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவம் செய்தாய்?” என்றார் நாரதர்.
    “”பாவமா! அது எப்படி செய்ய முடியும்.
    கடவுளின் நினைவைத் தவிர வேறில்லையே!” என அழுதார்.
    “”பார்த்தாயா! மரணம் வந்து விட்டது என்று தெரிந்ததும், உன் மனம் எப்படி மாறி விட்டதென்று!

    கடவுளைத் தவிர வேறு நினைப்பே இல்லாமல் போய் விட்டதல்லவா! மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன்.

    உனக்கு ஆயுள் இன்னும் இருக்கிறது,” என்று சொல்லி கட்டி அணைத்தார், நாமும் அனுதினமும் மரணபிடியில் இருக்கிறோம் என உணர்ந்து நாராயணன் நாமம் சொல்வோம் மரணபயம் இன்றி வாழ்வோம்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...