January 25, 2025, 3:08 PM
29 C
Chennai

ஒவ்வொரு கணமும் மரணமே.. பரமனை நாடு மனமே!

narather
narather

ஒரு முறை நாரத மகரிஷியிடம் இல்லறத்தான் (குடும்பவாசி) ஒருவர், “” அய்யா சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?” என்று கேட்டார்.

நாரத மகரிஷி அவரிடம்,”” என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக்
கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!” என்றார்.

“ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?” என்றார் பக்தர்.

“”ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்” என்றார் நாரத மகரிஷி.

இதைக் கேட்டு, “”சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?’ என்று அதிர்ந்தார்.

ஆம்..” என்றார் நாரத மகரிஷி. பீதியடைந்த பக்தரும், தினமும் பகவான் நாம சங்கீர்த்தனம், பஜனை, எளியோர்க்கு தொண்டு, என குடும்ப மகிழ்ச்சியோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஒருவாரம் கடந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் போர்வை சாற்றும் வைபவம்; பக்தர்கள் பங்கேற்பு!

“இன்று தான் கடைசிநாள்.
எனவே ஒருமுறை மீண்டும் நாரத மகரிஷியினை தரிசிக்கலாம்,” என்று புறப்பட்டார்.

கண்ணீர் மல்கியபடி, “”சுவாமி” என்று பாதத்தில் விழுந்தார்.
“”இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவம் செய்தாய்?” என்றார் நாரதர்.
“”பாவமா! அது எப்படி செய்ய முடியும்.
கடவுளின் நினைவைத் தவிர வேறில்லையே!” என அழுதார்.
“”பார்த்தாயா! மரணம் வந்து விட்டது என்று தெரிந்ததும், உன் மனம் எப்படி மாறி விட்டதென்று!

கடவுளைத் தவிர வேறு நினைப்பே இல்லாமல் போய் விட்டதல்லவா! மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன்.

உனக்கு ஆயுள் இன்னும் இருக்கிறது,” என்று சொல்லி கட்டி அணைத்தார், நாமும் அனுதினமும் மரணபிடியில் இருக்கிறோம் என உணர்ந்து நாராயணன் நாமம் சொல்வோம் மரணபயம் இன்றி வாழ்வோம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.