பாகிஸ்தான் நாட்டில், காத்தாடி தருவதாக கூறி 14 வயது சிறுவனை இருவர் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டு வாசலில் விளையாடிகொண்டிருந்தான். அப்போது சிறுவனை அணுகிய இளைஞர்கள் இருவர் காத்தாடி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
சிறுவனும் அவர்கள் கூறியதை நம்பி இருவருடனும் சென்றுள்ளான். அப்போது, மறைவான இடத்தில் வைத்து சிறுவனை இருவரும் வன்புணர்வு செய்துள்ளனர்.
இது குறித்து அறிந்த சிறுவனின் சகோதரர் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் பெயர் அப்துல்லா மற்றும் ரேகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற அதேநாளில் சாய்ஃபாபாத் நகரில் மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 12 வயது சிறுவன் ஒருவர் மதராசாவில் படித்து வருவதாகவும், மற்ற மாணவர்கள் சாப்பிட சென்றபோது, சிறுவனை மதராசாவின் காரி உமர் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.