வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை கோனேரி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரின் மகன் முனிவேல் (17) வள்ளிப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திடீரென பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த அவரை சக மாணவர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் மீட்டு வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவி ஒருவர், முந்திய நாள் மாலை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.