சூரிய குலத் தோன்றல் ராமனுக்கு சூரிய அபிஷேகம்!

surya thilak in ramalla - 2026
#image_title

இன்று நண்பகலில் அயோத்தி ராம பிரான் ஆலயத்தில் சூரிய கதிர்கள் ஸ்வாமியின் திரு நெற்றியில் படுகிற மாதிரியான அமைப்பு பற்றிய செய்திகள் வீடியோ காணக் கிடைக்கிறது ..

சூரிய திலகம் என்பது கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு புதுமையான விஞான ஏற்பாடு ஆகும், இன்றும், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று ராம் லல்லா சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் ஒளிரும் வகையில் இது அமைக்கப்பட்டு இருக்கிறது

பகவான் ராமர் பிறந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா (நமது சித்திரை ) மாதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

‘சூர்ய திலகம்’ பின்னால் உள்ள அறிவியல்:- இது நமது தமிழக கோவில்கள் மாதிரி நேரிடையான சூரிய ஒளி அமைப்பு இல்லை கண்ணாடி மற்றும் லென்ஸ் மற்றும் கியர் பாக்ஸ் அமைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு விஷயம்

இதை உருவாக்கிய டாக்டர் எஸ் கே பானிக்ரஹி, சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ ரூர்க்கியின் விஞ்ஞானி-

“சூர்ய திலக் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு ஸ்ரீராம நவமி நாளிலும் ஸ்ரீராமர் சிலையின் நெற்றியில் ‘திலகம்’ – சூரிய ஒளி தோன்ற வைப்பதாகும்.

இத்திட்டத்தின் கீழ், ஸ்ரீராம நவமி அன்று நண்பகலில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி கொண்டு வரப்படும். ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தில்,

ஒவ்வொரு ஆண்டும் சூரியனின் நிலை மாறுகிறது என்றும், விரிவான கணக்கீடுகளின்படி, ராம நவமி தேதி ஒவ்வொரு 19 வருடங்களுக்கும் மீண்டும் அதே நாளில் நிகழும்…

சிலையின் நெற்றியில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்ட திலகத்தின் திட்டமிடப்பட்ட அளவு 58 மிமீ ஆகும். திலகம் ராம் லல்லாவின் நெற்றியில் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் முழு வெளிச்சத்துடன் தெரியும்.

ராமர் கோயிலுக்குள் நுழையும் சூரியக் கதிர்கள் முதலில் கோயிலின் மேல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள கண்ணாடியில் விழும் என்று CSIR-CBRI விஞ்ஞானி விளக்கினார்.

பின்னர் மூன்று லென்ஸ்கள் மூலம் கோவிலின் இரண்டாவது மாடியில் உள்ள மற்றொரு கண்ணாடிக்கு கதிர்கள் செலுத்தப்படும்.

ராம நவமியின் போது சூரிய அபிஷேகத்திற்காக ராம் லல்லா சிலையின் நெற்றியில் தோன்றும் சூரிய ஒளி மற்றொரு கண்ணாடியைப் பயன்படுத்தி இரண்டாவது தளத்தின் வழியாக ராம் மந்திரின் கருவறைக்கு செலுத்தப்படும்.

சூரிய திலக் கருவி தயாரிக்க பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களால் ஆனவை, அவற்றின் நீடித்த தன்மை மற்றும் கால மாற்றத்தால் ஏற்படும் அரிப்பை எதிர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் சூரியன் துல்லியமாக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்திர நாட்காட்டியுடன் சீரமைக்கும் வகையில் கியர்பாக்ஸ் கொண்டு இதை நுட்பமாக வடிவமைததுள்ளார்கள் .

தமிழகத்தில் நமது முன்னோர்கள் இந்த கண்ணாடி கியர் பாக்ஸ் போன்ற விஞஞானகள் இல்லாமல் தானே நேரிடையாக சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும் படி கோவிலை அமைத்து இருந்தார்கள் .. அது வேற லெவல் விஞஞானம் ..

அவற்றில் சில

ஏகாம்பரேஸ்வரர் கோவில்:-

பங்குனி மாதமான மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு 19, 20, 21 ஆகிய தேதிகளில் கோயிலின் உள்சுவரில் உள்ள 1,008 சிவலிங்கங்கள் மீது சூரியக் கதிர்கள் விழுகின்றன. இக்கோயிலின் பங்குனி உத்திரம் திருவிழாவில் மிக முக்கியமான திருவிழாவாகும்.

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்களின் தீவிரத்தின் அடிப்படையில் லிங்கம் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறத்தை மாற்றுகிறது.

தேனுபுரீஸ்வரர் கோவில்:-

கபில நாதர் லிங்கம் ஏப்ரல் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்களால் நேரடியாகப் படுகிறது.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்கள் காலை 6:20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைகின்றன, சூரியன் உயரும் போது படிப்படியாக தெய்வத்தை நோக்கி நகர்கிறது.

இது கூகிள் இல் தேடியது – இன்னும் பல பல கோவில்கள் உள்ளன !!!

ராம பிரானுக்கு 21 ஆம் நூற்றாண்டில் நமக்கு தெரிந்த விஞஞானத்தை கொண்டு கட்டி இருக்கிறோம் – மேலும் வட நாட்டில் பெரிதாக இந்த கோவில் கட்டும் விஷயங்கள் இருந்த மாதிரி தெரியவில்லை !!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories