ஹெல்மெட் என்பது பொதுமக்களுக்கு மட்டுமானது இல்லை, போலீசாருக்கும் முக்கியமானது என்று அறிவுரை கூறியுள்ளார் டிஜிபி.
போலீஸார் எவரேனும் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்தால், அவருக்கான பொறுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என டிஜிபி ராஜேந்திரன் மிரட்டல் உத்தரவு இட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காவல்துறையினர் தலைக் கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்குவதால், காவலர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், தலைக்கவசம் அணியவேண்டும் என பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.