இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…
754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
2011 முதல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
கிராமப்புற கோவில்களுக்கான நிதி உதவி திட்டமும், ஒருகால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைகிறார்கள்
மேலும் சில நிதி ஒதுக்கீடுகள்…
2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு 140.11 கோடி ஒதுக்கீடு
திருமண நிதி உதவி திட்டங்களுக்கு 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கால்நடைத்துறைக்கு 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பால்வளத்துறைக்கு 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மீன்வளத்துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு
அரசு பல்கலைக் கழக கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு
தமிழக காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு