சிவபிரதோஷம் : “சிவகுடும்பம்“
கவிதை: மீ.விசுவநாதன்
வழிவிடு தெய்வம் இவரென்று – தினம்
வழிபடு கின்றோம் சிவரூபம்
விழிவழி உள்ளே இவர்சென்று – நம்
வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை.
வழிவழி யாக சிவநாமம் – நம்
வாக்கிலே நின்று நமைக்காக்கும்
அழிவது தீய குணமென்று – மட
அறிவினை மாற்றும் சிவஞானம்.
அளவது வான சிவகுடும்பம் – அதன்
அருமையே அன்பின் அருள்வடிவம்
உளமதில் கொண்டோர் உலகத்தில் – ஓர்
உரசலு மின்றி நிலைப்பார்கள்
(இன்று (12.08.2019) பிரதோஷம்)