82 அடியை எட்டிய மேட்டூர் அணை! ஒகேனக்கல்லில் குளிக்க 5வது நாளாக தடை!

Mettur Dam water for Aadi Perukku - 2026

சேலம் : மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடியை எட்டி உள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 5 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணியில் நீர்மட்டம் 129 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் நிரம்பி வருவதால் விநாடிக்கு 1.51 லட்சம் கனஅடி நீர் திறக்கப் பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக உயர்ந்துள்ளது. ஞாயிறு நேற்று அணை நீர்மட்டம் 67 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 15 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 82.62 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது.

இதே போன்ற நீர்வரத்து இருந்தால் திங்கள் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். ஆனால், கர்நாடகாவில் மழை அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் திறக்கப் படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடக – தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திங்கள் இன்று காலை  ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 2.15 லட்சம் கன அடியில் இருந்து 2.35 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories