காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் சத்யகோபால் தலைமையில் காஞ்சிபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ஜான் லூயிஸ் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
காஞ்சிபுரம் மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் நாளை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை எம்பி எம்எல்ஏக்கள் கேட்கப்படுகிறது.
காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம். அதுபோல செங்கல்பட்டு தாம்பரம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மதியம் 2 30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.