சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தீட்சிதர் தர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
தீட்சிதர் தர்ஷன் 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும். என்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்துக்கு வந்த பெண் பக்தர், தமது மகன் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோரிய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், தீட்சிதர் தர்ஷன் அவரைத் தள்ளிவிட்டதாக புகார்கூறப் பட்டு, வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதை அடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் தேடிவந்தனர்!