சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை அடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன.
நாளை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 10.50 மணிக்கும், வேளச்சேரி – சென்னை கோட்டை இடையே 11.25 மணிக்கும் ரயில்கள் இயக்கப் படும்.
மார்ச் 31ம் தேதி சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே இரவு 11.25 மணிக்கும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.