அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அளித்த பேட்டியில்,” ரெயில்வே துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
ரெயில்வே துறை தேர்வை தமிழில் தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தாதது ஏன்? தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறது. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு அதனால் எந்த பயனும் இல்லை.
சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. என்னை ஜோக்கர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளார்.
என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும். ஜென்டில்மேன் அக்ரிமெண்டை கடைப்பிடிப்பது அ.தி.மு.க. தான். பா.ம.க.விற்கு ஒரு ராஜ்ய சபா கொடுத்துள்ளோம்.
ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டோம். ஆனால் திமுக ஜென்டில்மேனாக இருப்பார்களா என்று கூற முடியாது. என்று கூறினார். மேலும் இஸ்ரோ அடுத்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும் ” என்றும் கூறினார்.