மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?
காப்பாற்றியது யார் என நான் சொல்கிறேன். மாட்டிவைக்க முயன்றது யார் என நீங்கள் சொல்லுங்கள்.
பாடகி சின்மயி இந்தியாவில் பெரிதாக நடத்தி வரும் #MeToo இயக்கத்தினால், பல பெண்கள் வயிரமுத்துவின் மேல் பாலியல் குற்றம் சாட்டி இருந்தனர். அந்தக் குற்றச்சாட்டோடு, வயிரமுத்து மார்கழி மாதம் கொண்டாடப்படும் நம் தெய்வத் தாயான ஆண்டாளை இகழ்ந்து பொய் உரைத்தது மிகவும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த #MeToo சர்ச்சையை முடித்துவைக்க விரும்பிய மத்திய அரசு, இது குறித்து ஒரு விசாரணைக் கமிஷனை நடத்தப்போவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பினால், இந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியே காற்றில் காய விடப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் அந்த விசாரணைக் கமிஷன் இதுவரை அமைக்கப்படவில்லை !
இந்நிலையில் பாஜகவின் முன்னாள் கூட்டணி வேட்பாளரான பச்சையப்பர் நடத்தும் பல்கலைக் கழகம் வயிரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.
எந்த மார்கழி மாதத்தில் ஆண்டாளை வயிரமுத்து இகழ்ந்தாரோ, அதே அதே மார்கழி மாதம் அன்று இந்த விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது !
இந்த விருதினை ராஜ்நாத் சிங் ஜி கையால் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் உள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர்.
“நான் உயிரோடு இருக்கும்வரை இதனை நடக்க விடமாட்டேன்” என்று சொல்லிய H Raja ஜி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து, ராஜ்நாத் சிங் ஜி இந்த விழாவிற்கு வரவிடாமல் செய்தார்.
இதன் மூலம், அவர் இந்துக்களின் உணர்வை மட்டும் காப்பாற்றவில்லை. உலக அளவில் பாஜகவிற்கு ஏற்பட இருந்த அவமதிப்பை அவர் தடுத்து உள்ளார்.
எப்படி ?
அறிவிக்கப்பட்ட #MeToo குறித்த விசாரணைக் கமிஷனுக்கு யார் தலைமை தெரியுமா ?
ராஜ்நாத் சிங் ஜி.
- ஆனந்த கணேஷ்