அனிதாவை கொன்றது திமுக+காங்கிரஸ் கூட்டணி தான் என்று, நடந்த உண்மைகளை, ஆதாரத்துடன் கூறி, திமுக கூட்டணியின் மறைமுக செயல்திட்டத்தை விளக்குகிறது இந்த வீடியோ. #NEET
நீட் தேர்வு என்ற அரசியல் சூழலை உருவாக்கியவர்கள் திமுக.,வினரே என்றும், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப் பட்ட போது, கூட்டணி கட்சியான திமுக அதற்கு வேடிக்கை பார்த்தது என்றும், ஆனால் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதமும், அதன் பேரில் மோடி தனது அமைச்சரவை சகாக்கள் மூலம் விலக்கு அளித்ததும், இருப்பினும், காங்கிரஸின் நளினி சிதம்பரம்தான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு, நீட் தேர்வை கட்டாயப் படுத்தக் காரணமானார் என்றும் இந்த வீடியோ விளக்குகிறது.
நீட் தேர்வு ரத்து ஆகும் என்று கடைசிக் கட்டம் வரை நம்பிக்கை கொடுத்து, எல்லா விதத்திலும் ஒரு சிறு பெண்ணை ஏமாற்றி, அந்தப் பெண் உயிரிழக்கக் காரணமான திமுக.,வின் நயவஞ்சகத்தனத்தை இந்த வீடியோ பதிவு கட்டம் போட்டுக் காட்டுகிறது.