யானையை பயன்படுத்தி , நபர் ஒருவர் உயரமாக இருந்த கூடைக்குள் பந்தினை இடமுயன்ற வீடியோ இணையத்தை கலக்குகிறது.
அண்மையில் டிக்டாக்கில் வெளியான அந்த வீடியோவில், பயிற்சி பெற்ற யானை ஒன்று, சீசா போன்ற உயர் பலகை அருகே நின்று, ஒற்றை காலால் அதனை மிதிக்கிறது.
அதன் வேகத்திற்கு ஏற்ப மறுபுறம் நின்றிருந்த நபர், குட்டிக்கரணம் அடித்தபடி அங்கிருந்த கூடையில் பந்தினை இட முயன்றார்.
ஆனால் அதன்பின் ஒருவர் பலகையில் ஏறி நிற்க, யானை அதனை மிதிக்க முயன்றபோது, ஏற்ற பலகை முறிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.