திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை 3 மணி 47 நிமிடங்களில் பாடி இந்தியன் புக் ரிக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் மதுரை மாணவி யாழினி (12), இடம் பிடித்துள்ளார்.
மதுரை பொன்மேனி மங்கலம் நகர் சிவசுரேஷ்-, அன்புமாரி. இவர்களது மகள் யாழினி, சாரதா வித்யாபவன் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார்.
4 வயது முதல் திருவாசகம் பயின்றார். சுரேஷ் கூறியதாவது: ஆறு வயது முதல் திருவாசகத்தை பொருளுணர்ந்து கற்று பல்வேறு கோயில்களில் சொற்பொழிவாற்றி உள்ளார்.
திருவாசகம் சம்பந்தமான போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார். 7 வயதில் திருவாவடுதுறை ஆதினத்திடம் சமய தீட்சை பெற்றார்.
திருவாசகத்தை பொருளுடன் எளிய ராகத்துடன் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். திருவாசக பாடல்களை ராகத்துடன் 3 மணி நேரம் 47 நிமிடங்களுக்குள் பாடி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றார்.