மின்சார கட்டணத்தை நேரடியாக EB அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமமான பணியாகும். மாத கடைசியில் சென்றால், பணம் கட்டுவதற்கு பெரிய கூட்டமே வரிசையில் காத்திருப்பதை காண முடியும்.
இத்தகைய சிரமங்களை போக்கிட, உட்கார்ந்த இடத்திலே ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்திவிடலாம். மிகவும் வேகமாகவும், ஈஸியாகவும் பணத்தை செலுத்திவிட முடியும்.
ஒன்று, Tamilnadu Electrity, அதானி, மகாவிதரன் போன்ற இணையதளங்கள் வாயிலாக மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.
மற்றொரு ஈஸி வழி, மொபைலில் வைத்திருக்கும் கூகுள் பே, பேடிஎம் செயலிகள் மூலமாக எளிதாக கரண்ட் பில் கட்டிவிடலாம்.
இந்த முறையை பயன்படுத்தி பணம் செலுத்துகையில், கேஷ்பெக் ஆஃபர்களும், வவுச்சர்களும் கிடைத்திடும்.