மோடியை “உலகம் சுற்றும் வாலிபன்” என்று தரக்குறைவாக விமர்சித்திருந்தார் ஸ்டாலின்.
இது போல்தான் இவரின் தந்தை மு.கருணாநிதியும் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவர இருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எவ்வாறேனும் தடுக்க வேண்டுமென்று ” படம் வராது. பிலிம் எல்லாம் எக்ஸ்போஸாகிப்போச்சு என்று எம்.ஜி ஆர்.ரசிகர்களை வருத்தப்பட வைத்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர் இன்று மோடி எவ்வளவு அமைதியாக இருந்தாரோ அதுபோல் அமைதியாக இருந்து படத்தின் எடிட்டிங் முதலியவைகளை மும்பையில் வைத்து முடித்துவிட்டார்.
படம் வருமா வராதா என்று பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். கேட்கணுமா அன்று..?
எம்.ஜி.ஆர் அவ்வளவுதான். படம் எடுத்த காசெல்லாம் போச்சு. இனி அவர் தமிழ்நாட்டைவிட்டே ஓடிவிடுவார் என்று மனப்பால் குடித்தார் கருணாநிதி.
ஒரு நாள் உலகம் சுற்ற்றும் வாலிபன் திடீரென்று ரிலீசாகி சக்கை போடு போட்டு Box Office hit.
அன்று அமைதியாக இருந்து கருணாநிதியின் முகத்தில் கரியைப்பூசினார் அந்த உலகம் சுற்றும் வாலிபன்.
அதே போல் ஸ்டாலின் முகத்தில் மோடி கரியை பூசப்போவது நிச்சயம்.