கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

Published:

abvp conference - 2026

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றுகின்ற மாணவர் தலைவர்கள் சுமார் 3500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 மாணவர் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அவர்களில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 13 பேர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் டிச.25 இன்று காலை 7.45 மணி அளவில் மாநகர செயலாளர் விஷ்ணு தலைமையில் ஜாம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய போது, இந்த மாநாட்டில் தேசிய அளவிலான கல்வி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் கலாசார பரிமாற்றம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள், கலாச்சார உடை ஊர்வலம், பொதுக்கூட்டம், கண்காட்சிகள் நடைபெறும். மேலும் சிறந்த இளைஞர்க்கான விருது, சேவைக்கான விருது ஆகிய விருதுகளும் வழப்ங்கப்பட உள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்து கொள்கிறார்..
. என்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img