விஜயதசமீ… ஏன்? எதற்கு?

kanchi perumal utsav - 2026

விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !

எல்லையைத் தாண்டுவது, வன்னி மரத்தை வணங்குவது, தேசாந்தரங்களுக்குப் பயணம் போன்றவைகள் இந்நன்னாளில் செய்யத் தகுந்தனவாம் !

அபராஜிதையை வழிபடும் அரசர்கள், ” யாத்ராயாம் விஜய ஸித்த்யர்த்தம் ” என பூஜை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் !

ஹாரேண து விசித்ரேண பாஸ்வத் கநக மேகலா |
அபராஜிதா பத்ரதா கரோது விஜயம் மம ||

என்கிற மந்த்ரத்தை வெற்றியை விரும்பும் அரசன் சொல்ல வேண்டியது !

ஊருக்கு வெளியில் ஈசான திசையில் வன்னி மரத்தை பூசிக்க வேண்டியது .. ஊர் எல்லையை பூசைக்கு முன்போ அல்லது பின்போ தாண்டலாம் ..

புரோஹிதர்களையும் மந்திரிப் பிரதானிகளையும் முன்னிட்டுக் கொண்டு அரசன் தன் குதிரை மீதமர்ந்து , வன்னி மரத்தின் அருகே சென்று , கீழிறங்கி ஸ்வஸ்தி வாசன பூர்வகமாக வன்னியை பூசிக்க வேண்டும் !

kanchi perumal utsav2 - 2026

மம துஷ்க்ருத அமங்கலாதி நிரஸநார்த்தம் க்ஷேமார்த்தம் ” யாத்ராயாம் விஜயார்த்தம் ” ச ஷமீ பூஜாம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் !

( என்னுடைய பாபங்கள், அமங்களங்கள் இவைகளை போக்கிக் கொள்ளவும் , நன்மைக்காகவும், யாத்திரையில் வெற்றிக்காகவும் இந்த வன்னி மரத்தை வணங்குகிறேன் )

அமங்களானாம் ஷமனீம் ஷமனீம் துஷ்க்ருதஸ்ய ச ; து:க்க ப்ரணாசினீம் தந்யாம் ப்ரபத்யேஹம் ஷமீம் சுபாம் ||

( அமங்களங்களையும் பாபங்களையும் அழிப்பதாய், துன்பங்களைப் போக்குவதாய், எல்லா வகைகளிலும் சிறந்ததாயுமுள்ள சுபமான வன்னியை வணங்குகிறேன் )

என்கிற மந்திரத்தைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும் !

ஸ்ரீ ராமனே இப்பூசையை செய்திருப்பதாக பின் வரும் ச்லோகம் உரைப்பதையும் காண்போம் !!

” கரிஷ்யமாண யாத்ராயாம் யதாகாலம் ஸுகம் மயா | தத்ர நிர்விக்ந கர்த்தா த்வம் பவ ஸ்ரீ ராம பூஜிதே || “

இஷ்டமானதைப் பார்ப்பதற்கும்,/ அடைவதற்கும் ,சத்ருக்களின் விநாசத்திற்கும் இப்பூஜை ஆவச்யகமாகும் !!

அச்மந்தக மஹாவ்ருக்ஷ மஹாதோஷ நிவாரண |

இஷ்டாநாம் தர்சனம் தேஹி சத்ரூணாஞ்ச விநாசனம் ||

என்று ப்ரார்த்திக்க வேண்டும் !

எதிரியின் உருவத்தை, பிம்பத்தைச் சமைத்து, அரசன் தன் அம்புகளால் அதனை வீழ்த்த வேண்டும் ..

அதற்கு பதிலாக வன்னி மரத்தில் அம்பெய்வதும் சாத்திரங்களின்படிச் சரியே !!

வாத்தியங்களுடனும் , ஆடல் பாடல்களுடனும் இப்பூசை விமரிசையாகச் செய்யப்பட வேண்டியது !

அரசனின் நன்மையை விரும்புவோர் அச்சமயம் உடனிருக்க வேண்டும் !

கோயில்களில் அச்சமயம் செந்தமிழ் பாடுவார்களும், வடமறை வல்லுனர்களும் எம்பெருமானைச் சூழ்ந்திருப்பது அவனது நன்மையை வேண்டியன்றோ !

நால் திசையிலும் நம் தேவுக்கு வெற்றியே வசமாகட்டும் என்கிற காரணம் பற்றியே , நாற்புறமும் அம்பெய்வது ..

சதுர் திக் விஜயார்த்தம் பாண சதுஷ்டயம் ப்ரயுஜ்ய .. என்று பாத்ம தந்த்ரத்தில் ( ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் ) ப்ரமாணம்

விஜய முஹூர்த்தத்தில் தேசாந்தர கமனம் (வெளி தேசங்களுக்கு – ஊர்களுக்கு) செல்ல வேண்டும் .. சாத்திரங்களின் கட்டளைப்படி இவைகள் செய்யப் பெற்றிருந்தால் வெற்றி நிச்சயம் !!! ????

  • கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி
  • படங்கள்: வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories