கர்மா மோக்ஷத்திற்கு உதவுமா? ஆச்சார்யாள் பதில்!

abinav vidhya theerthar
abinav vidhya theerthar

சிஷ்யன் : மோக்ஷத்திற்குக் காரணம் என்ன

ஆச்சார்யாள் : ப்ரஹ்ம ஞானம்தான் மோக்ஷத்திற்குக் காரணம்

ஞானாதேவ து கைவல்யம்
(ஞானத்திலிருந்துதான் மோக்ஷம் பெறலாம்)

தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி,
நான்ய:பந்தா வித்யதேsயனாய

(அவனைத் தெரிந்து கொண்டால்தான் ஒருவன் மரணம் அற்றவனாகிறான், வேறு வழியில்லை .) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

சி : இப்படியென்றால் கர்மா ஞானத்திற்கு நேரடியான காரணமில்லை. என்றுதானே பொருளாகும்.?

ஆ : ஆம். சாஸ்திரங்கள் இவ்விஷயத்தில் தீர்மானத்துடன் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாஸ்திரங்களிலேயே,

ந கர்மணா… (கர்மாவினால் இல்லை …)

என்று மோஷத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள்.

சி : ஞானம் எப்போது உண்டாகும்?

ஆ : எப்போது மனம் சுத்தமாகி, ஆசையற்றதாக இருக்குமோ அப்போது அங்கு ஞானம் உண்டாகும்.

சி : இறைவனுக்கு அர்ப்பணித்துக் கர்மா செய்வதால் மனதிற்குத் தூய்மை ஏற்படாதா?

ஆ : ஆம், தூய்மை ஏற்படும்

சி : அப்படியென்றால் கர்மாவும் மோக்ஷத்திற்குக் காரணம் என்றுதானே கூறவேண்டும்? ஏனென்றால் கர்மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்தால் மனம் புனிதமாகிறது. புனிதமான மனதில்தான் ஞானம் ஏற்படுகிறது. ஞானத்தினால்தான் மோக்ஷம் ஏற்படுகிறது. ஆதலால் கர்மா மோஷத்திற்குக் காரணம் என்றுதானே கூற வேண்டும்.?

ஆ : நீ தந்த காரணமே கர்மா மோக்ஷத்திற்கு நேரடியான காரணமில்லை என்று தெளிவுபடுத்துகிறது. பானைக்கு மண் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல் பானையை எவன் செய்கிறானோ அவனும் ஒருவிதமான காரணம் என்றுதான் கூற வேண்டும். செய்தவனின் தந்தையும் காரணமா? ஏனெனில் செய்தவனின் தந்தை இல்லாமல் செய்தவன் வந்திருக்க முடியாது. அவனில்லாமல் பானை வந்திருக்க முடியாது.

சி : செய்பவனின் தந்தையைக் காரணமாகக் கூறமுடியாது. ஏனென்றால் செய்பவனின் தாத்தா, அவருக்கும் அப்பா என்று போய்க் கொண்டே யிருக்கும்.

ஆ : அதே யுக்தியை இங்கும் உபயோகப்படுத்தினால் கர்மா மோஷத்திற்குக் காரணமாகாது என்பதைத் தெரிந்து கொள்ளலாம், மேலும் எது கர்மாவினால் ஏற்படுகிறதோ அதற்கொரு முடிவும் உண்டு. ஏனென்றால் கர்மா ஒரு பலனைக் கொடுக்கத் தொடங்குகிறதென்றால் அங்கு ஒரு தொடங்கும் காலமிருக்கிறது. எது தொடங்குகிறதோ அதற்கு முடிவிருக்க வேண்டும். ஆதலால் மோஷம் கர்மாவினால் ஏற்பட்டால் அது நித்யமாக முடியாது ஆனால் மோக்ஷம் நித்யமென்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அது நிலை பெறாதது என்று ஒரு சாஸ்திரமும் கூறுவதில்லை, புக்திக்கும் அது பொருத்தமாக இல்லை. ஆதலால் ஞானம்தான் மோஷத்திற்கு நேரடியான காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories