Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

- Advertisement -
- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 337
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி ஏழாவது திருப்புகழான “கோங்கிள நீரிளக” எனத் தொடங்கும் திருப்புகழ் திருவேங்கடம் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருவேங்கட முருகா, மாதர் இன்பம் விரும்பி, அவநெறியில் செல்லாமல் காத்து அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்

     வாங்கிய வேல்விழியும் …… இருள்கூருங்

கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்

     மாந்தளிர் போல்வடிவும் …… மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு

     தீங்குட னேயுழலும் …… உயிர்வாழ்வு

பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்

     வீழ்ந்தலை யாமலருள் …… புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்

     வேங்கையு மாய்மறமி …… னுடன்வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக

     பாண்டிய னீறணிய …… மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்

     வேங்கட மாமலையி …… லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

     வேண்டவெ றாதுதவு …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – தோழியும் வேடர்களும் திகைக்குமாறு, வேங்கை மரமாகி நின்று, தவமுனிவராக வந்து, வள்ளிபிராட்டியை மணந்து வாழ்பவரே; அர்ச்சுனப் பெருமானுடைய தேரைச் செலுத்திய நெடியவராம் திருமாலின் திருமருகரே; கூன் பாண்டியன் திறுநீறு தரிக்குமாறு “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளியவரே; புலியும், யானையும், வேங்கை மரமும், மானும் வாழ்ந்து வளர்கின்ற திருவேங்கட மலையில் உறைபவரே; அடியார்கள் வேண்டிய சுகங்களை அவர்கள் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் வழங்கியருளும் பெருமிதம் உடையவரே;

     பெண்களின் சேர்க்கையை விட முடியாதவனாகி, தீமையுடனே திரிகின்ற உயிர் வாழ்க்கையைக் கொண்டு, அடியேன் அத் தீ நெறியிலேயே நின்று இறந்து, இவ்வண்ணமே நரகில் விழுந்து அலையாத வண்ணம் அருள் புரிவீராக – என்பதாகும்.

     இந்தப் பாடலில் வள்ளிபிராட்டியைக் காண வேடரய், முதியவராய் வந்த முருகன் வேங்கை மரமாய் நின்ற கதை, அர்ச்சுனனுக்கு கண்ணபிரான் தேரோட்டியாய், பார்த்தசாரதியாய் வந்த கதை, கூன் பாண்டியனுக்கு திருநீறு பூசி அவனது வெக்கை நோயை ப