செங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி மாத ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் நேற்றுத் தொடங்கியது.
செங்கோட்டையில் பெருமாள் சன்னதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாள பெருமாளுக்கு ஆடி மாதத்தில் பதினொருநாட்கள் தேரோட்டத்திருவிழா நடைப்பெறும். இந்த வருடத்திற்கான உற்சவத்தின் தொடக்கம் நேற்று ஆக்ஸ்ட் 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. மாலை அன்னவாகனத்தில் உற்சவர் சுந்தராஜ பெருமாள் எழுந்தருளினார்.ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதி தேரோட்டம் நடைப்பெறயுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆராட்டு உற்சவமும், இரவு சப்தாவர்ணத்துடன், பெரியதிருவடி மீது பெருமாள் எழுந்தருளுவதுடன் திருநாள் நிறைவடையும்.