கோயமுத்தூர், காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் சுதையாலான திருமேனியராக அருள் பாலிக்கிறார்.
லட்சுமி நரசிம்மருக்கும், கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப் பெற்று, லட்சுமி நரசிம்மருக்கு துளசி மற்றும் மலர்களால் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
நரசிம்ம ஜெயந்தி சிறப்பு தீபாராதனை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்: சரண், காரமடை.