அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் திருவாதிரை திருவிழா!

avinasilinkeshwarar - 2026

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும்.

காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியாமல் இருந்தனர்.

தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் கடந்த 11ம் தேதி ஸ்ரீ மாணிக்கவாசக பெருமான் திருவாதிரை நாச்சியார் காப்புகட்டுதலுடன் துவங்கியது.

இதையடுத்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் திருவெம்பாவை உற்சவத்துடன் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்று வந்தது.

இதையடுத்து நேற்று இரவு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.

தரிசன நாளான இன்று அதிகாலை 3 மணி முதல் நடராஜப்பெருமான மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, பஞசகவ்யம், வெண்ணை, அன்னம், நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், பச்சரிசி மாவு, பச்சை பயறு மாவு, நெல்லிப்பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழுங்க ஓதுவார் மூர்த்திகள் தேவாரப் பாடல்கள் பாட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சாமிக்கு பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து கோயில் பிரகாரத்தில் சாமி பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

அதிகாலை 3 மணி முதல் கொட்டும் பனியையும் பொருப்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரளாக வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர் என்ப்[அது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories