நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கரடிகள்! பீதியில் கதி கலங்கிய மக்கள்!

bear 1 - 2026

நள்ளிரவு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் உணவு தேடி வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களை பீதி அடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட விளங்குகள் உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் அச்சத்துடனே இருக்க வேண்டியதாக உள்ளது.

குன்னூர் அருகேவுள்ள கிராமம் சின்ன உபதலை. இது வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

அதனால் இங்கு விலங்கு மனித மோதல் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இந்நிலையில் அங்குள்ள வீட்டின் உள்ளே இரண்டு கரடிகள் புகுந்த வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.

உணவு தேடி வீடுகளுக்கு புகுந்த கரடியை கிராம மக்கள் பார்த்ததும் பீதி அடைந்து வீட்டை பூட்டி கொண்டனர்.

அங்குள்ள வீட்டுக்குள் புகுந்த கரடி திண்பதற்கு பொருளை தேடியது. அந்த நேரத்தில் வெளியே மற்றொரு கரடி வந்தது. அதை பார்த்ததும் உள்ளே இருந்த கரடி வெளியே ஓடிவிட்டது.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து மக்கள் பலரும் விலங்கு மனித மோதலை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories