அம்பாலா நகரம்: 5 வயது சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆண்கள் பயந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது பெண்கள் சேர்ந்து அந்த நபருக்கு அடிக் கொடுக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
தற்சமயம் நாடெங்கிலும் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளது வயது வித்யாசமின்றி 3 வயது முதல் 80 வயது வரையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் வன்கொடுமைகளும் அதிக அளவில் நடைபெறுகிறது
இந்நிலையில் அம்பாலா நகரத்தில் 5 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட போது அங்குள்ளவர்களால் பிடிக்கப்பட்டார்.
ஆத்திரமடைந்த பெண்கள் அவரை திட்டி அடித்து அவரை நிர்வாணமாக்கி வாட்ஸ்அப் ல் போடுங்கள் என்றும் வீடியோ எடுக்க சொல்லியும் சொல்கின்றனர்.
ஆண்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க பெண்கள் துணிவுடனும் தாற்மீக கோபத்துடனும் இதனை செய்கின்றனர். பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என தேசியக் கவியின் பாப்பா பாட்டிற்கு தக்கவாறு இந்நிகழ்வு அமைந்துள்ளது தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.