நெல்லை மாவட்டத்தில் நூதன மோசடி தொடர்கிறது
சத்துணவு பணிக்கு வழங்கிய நியமனம் ஆனை போலி என கண்டுபிடிப்பு
கடையநல்லூர் வட்டார வளர்ச்சிஅலுவலகத்தில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரை சார்ந்த கார்திகேயன் மனைவி கலைஅரசி இன்று பகலில் கடையநல்லூர்
வட்டார வளர்ச்சிஅலுவலகம் வந்து தனக்கு போஸ்டல் மூலம் சத்துணவு பணிக்கு வழங்கிய நியமனம் ஆனையை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனிடம் காண்பித்தார்.
அதனை பரிசோதனை செய்த வட்டார வளர்ச்சிஅலுவலர் அது போலி என கண்டுபிடித்தார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறார்.
செய்தி: குறிச்சி சுலைமான்