பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

பத்யாதிரிகையாளர்களுக்கு நலவாரியம் தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும் !

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடம் கோரிக்கை…

அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது.

தோழர் சி.கருணாகரன் தலைமையில் ஓவியர் ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க தலைவர்களான உயர்திரு நா.பாலகங்கா, சிறுணியம் P.பலராமன், உயர்திரு வாலாஜாபாத் கணேசன், உயர்திரு ஆர்.கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்வில் திருமதி சசிகலாதேவி ரவீந்திரதாஸ், இயக்கணி விஜயன், கௌதம சித்தார்த்தன், இரா.கதிரவன், இராஜகவி ராஜகாந்தன், சி.தமிழ்செல்வன், தின உரிமை கல்பனா உட்பட பலர் அமைச்சர் அவர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக நலவாரியம் உட்பட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மாநிலம் தழுவிய ஒரு அமைப்பு இருப்பதற்கு காரணமாக விளங்குபவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி்.ஆர். அவர்கள்தான் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

மேலும் அவர் பேசுகையில்…

” எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு தவிர்க்க முடியாத சூழலில் இந்து ராம் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டபோது இது போன்ற விஷயங்களுக்கு ஒன்று கூடி குரல் கொடுக்க மாநில அளவில் பத்திரிகையாளர்களுக்கு என்று எந்த ஒரு அமைப்பும் இல்லையா என்று கேட்க, மாநிலம் தழுவிய ஒரு அமைப்பை உருவாக்க அதுவே தூண்டுதலாக இருந்தது எனலாம்.

மாவட்ட அளவில் பிரஸ் கிளப், கில்டு, மன்றங்கள் போன்றவைகள் இருந்த வேளையில் பல ஆண்டுகள் போராட்டத்திக்குப் பின்பு, மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் 1990 ல் தமிழகம் தழுவிய முதல் சங்கமாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களுக்கான ஓய்வு ஊதியம், குடும்ப நல நிதி உட்பட பல வகையான சலுகைகளை பெற்றுத் தந்தார் தோழர் டி.எஸ்.ஆர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக காரணமாக விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாக்களை இந்த அரசு தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

தமிழகத்தில் கட்டிட தொழிலாளர்கள் துவங்கி, திரைப்பட கலைஞர்கள் வரை நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால் மக்கள் திலகம் ஆதரவால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இன்றுவரை ஒரு நலவாரியம் அமைக்கப்படவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு வழங்கினாலும், நலவாரியம் அமைத்தால் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லை பதித்தது போல் ஆகிவிடும் ” என்று பேசினார்..

மேலும் ” ரஜினி,கமல் என யார் வந்தாலும் அவர்களால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது, காரணம் பல சோதனைகளையும், பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து அவைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்து வந்தவர் எம்.ஜி.ஆர்.” என்றும் அவர் எப்படி படிப்படியாக வளர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று பேசினார் டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசுகையில் ” எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, அரசு விழாக்களை நடத்துவதைவிட உங்களைப் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி இப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories