சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பியுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தரைமட்டத்தில் இருந்து 2650 கி.மீ., உயரத்தில் இருந்து எடுத்து 2019 ஆக.21ம் தேதி (புதன்கிழமை) அனுப்பிய படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
Take a look at the first Moon image captured by #Chandrayaan2 #VikramLander taken at a height of about 2650 km from Lunar surface on August 21, 2019.
Mare Orientale basin and Apollo craters are identified in the picture.#ISRO pic.twitter.com/ZEoLnSlATQ
— ISRO (@isro) August 22, 2019