கலக்கத்தில் கழகம்! பாகிஸ்தான் ஆதரவு அவப்பெயரால் ஆர்ப்பாட்டத்தை மாற்றிய பின்னணி!

delhi protest - 2026முதலில் #காஷ்மீரில் 370 ரத்தை எதிர்த்து தில்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு என்ன பயமோ? அல்லது #பாகிஸ்தான்_ரேடியோ டிவிட்டர் நேரலை பிரச்சார பயமோ? அல்லது ப.சிதம்பரத்தின் நிலையை கண்ட பயமோ?

கடைசியில் காஷ்மீர் வீட்டுக் காவலில் உள்ளவர்களை விடுவிக்கணும், அமைதி திரும்ப என்று தலைப்பை மாற்றி விட்டனர். திமுக தலைவர் #ஸ்டாலினும், தமிழக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் #திருமா , #வைகோ கலந்து கொள்ளவில்லை.. வரப் போகிற 2021 #சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சரிந்த #இஸ்லாமிய வாக்கு வங்கியை திமுக பலப்படுத்த திட்டம் தவிர இதில் வேறு ஒன்றுமில்லை.. என்கிறார்கள் திமுக., தலைமையில் இன்று தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை! dmkprotest delhi - 2026

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை எதிர்த்து திமுக சார்பில் இன்று தில்லியில் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீருக்கு போடப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவுக்கு பெரும்பான்மை
இருந்ததால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திமுக தலைமையில் தில்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு முக.ஸ்டாலின் செல்லவில்லை. கார்த்திக் சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து சென்னையில் அளித்த பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின், ‘’இன்று தில்லியில் திமுக., தலைமையில் அனைத்து எதிர்க்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்பாட்டத்தின் நோக்கம், வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் தலைவர்கள், தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும். அங்கே நிறுத்தப்பட்டு இருக்கும் தொலைதொடர்பு துண்டிப்புகளை சரிசெய்ய வேண்டும்,
மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் திமுகவின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

stalin meme1 - 2026முன்னதாக, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், திமுக மட்டும் அதனை எதிர்த்து தில்லியில் போராட்டம் அறிவித்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

திமுக.,வின் இந்த நிலைப்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், ஒரு டிவிட்டர் பதிவில், ஸ்டாலினுக்கு நன்றி சொன்னது. இதை எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக., ஆர்ப்பாட்டம் நடத்தியது. 370 சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியில் நொந்து போன பாகிஸ்தான், மோடி அரசுக்கு எதிராக என்ன விஷயம் கிடைக்கும் என காத்துக் கொண்டிருந்தது. அதற்கு, திமுக.,வின் ஆர்ப்பாட்ட அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அதனையே தன் பிரசாரத்துக்கும் பயன்படுத்திக் கொண்டது.

ரேடியோ பாகிஸ்தான், “இந்தியாவில் 2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது” என குறிப்பிட்டு டிவிட்டர் பதிவு செய்தது. இதையே பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

stalin - 2026ஆனால், இது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பரவியது. பாகிஸ்தான் ஆதரவுடன் திமுக., இயங்குவதாகக் குறிப்பிட்டனர் பலரும்! இதனை சிறிதும் எதிர்பார்க்காத திமுக தலைமை கலக்கத்தில் ஆழ்ந்தது. பாகிஸ்தான் ஆதரவுக் கட்சி திமுக., என்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி உள்ளது. எனவே தான், இதை சமாளிப்பதற்காக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் என கூறி வந்த திமுக, தற்போது காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மட்டுமே போராட்டம் நடத்துகிறோம் என மாற்றிப் பேசியது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்நிலையில் திமுக.,வின் இந்த நிலைப்பாடும், ஸ்டாலின், திருமா வளவன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாததும்  பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories