February 22, 2026, 12:50 AM
26.7 C
Chennai

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்”- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட)

சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்)

64264513 2148749825236295 3038016151566155776 n 1 - 2026

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பனிக்காலம். பெரியவாளின் உதடுகளில் வெடிப்பு. அதனால் வேதனை.பேசுவதற்குக்கூட அசௌகரியமாக இருந்தது. அடிக்கடி வெண்ணெயை உதடுகளில் தடவிக் கொண்டால் வெடிப்புகளில் வறட்சி நீங்கி, நெய்ப்புத் தன்மை உண்டாகும். ஆனால், கடையில் விற்கும்
வெண்ணெயைப் பெரியவாள் உபயோகப்படுத்த மாட்டார்களே!

ஒரு பாட்டி, மிக அக்கறையாக ஐந்து சேர் பசும்பால் வாங்கிக் காய்ச்சி,உறை குத்தி, தயிராக்கிக் கடைந்து, வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“ரொம்ப மடியாய்ப் பண்ணியிருக்கேன். உதட்டில் தடவிக்கணும். உள்ளேயும் சாப்பிடலாம்”-பாட்டி.

வெண்ணெய் என்ற பெயரைக் கேட்டாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நினைவு வந்து விடும் பெரியவாளுக்கு.அதனால் பாட்டி கொடுத்த
வெண்ணெயைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்போது ஒரு குழந்தை வெண்ணெய் கேட்டுக் கையை நீட்டியது.பாலகிருஷ்ணனே வந்து கேட்பதாகப் பெரியவாளுக்குத் தோன்றியதோ என்னவோ, அத்தனை வெண்ணெயையும் குழந்தையிடம் கொடுத்து ஆனந்தப்பட்டார்கள்.

தொண்டர்களுக்கு முகம் சுருங்கியது.

“கேட்ட குழந்தைக்கு ஓர் எலுமிச்சங்காய் பரிமாணம் வெண்ணெய் கொடுத்தால் போதாதா? எல்லாவற்றையும் கொடுத்தாயிற்றே? அப்புறம் உதட்டில் தடவிக் கொள்ள ஏது வெண்ணெய்?”-தொண்டர்கள் தங்களுக்குள்

“ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? குழந்தை வெண்ணெய் சாப்பிட்டாலே என் உதட்டுப் புண் சரியாயிடும்..”பெரியவா

அன்று சாயங்காலமே பெரியவாள் உதட்டில் புண் இல்லை. காலையில் பார்த்த கிருஷ்ணக் குழந்தை வெண்ணெயைச் சாப்பிட்டு விட்டது போலும், ‘சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?

பரமேசுவரனே அறிவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories