December 6, 2025, 5:42 AM
24.9 C
Chennai

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்”- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட)

சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்)

64264513 2148749825236295 3038016151566155776 n 1 - 2025

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பனிக்காலம். பெரியவாளின் உதடுகளில் வெடிப்பு. அதனால் வேதனை.பேசுவதற்குக்கூட அசௌகரியமாக இருந்தது. அடிக்கடி வெண்ணெயை உதடுகளில் தடவிக் கொண்டால் வெடிப்புகளில் வறட்சி நீங்கி, நெய்ப்புத் தன்மை உண்டாகும். ஆனால், கடையில் விற்கும்
வெண்ணெயைப் பெரியவாள் உபயோகப்படுத்த மாட்டார்களே!

ஒரு பாட்டி, மிக அக்கறையாக ஐந்து சேர் பசும்பால் வாங்கிக் காய்ச்சி,உறை குத்தி, தயிராக்கிக் கடைந்து, வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“ரொம்ப மடியாய்ப் பண்ணியிருக்கேன். உதட்டில் தடவிக்கணும். உள்ளேயும் சாப்பிடலாம்”-பாட்டி.

வெண்ணெய் என்ற பெயரைக் கேட்டாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நினைவு வந்து விடும் பெரியவாளுக்கு.அதனால் பாட்டி கொடுத்த
வெண்ணெயைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்போது ஒரு குழந்தை வெண்ணெய் கேட்டுக் கையை நீட்டியது.பாலகிருஷ்ணனே வந்து கேட்பதாகப் பெரியவாளுக்குத் தோன்றியதோ என்னவோ, அத்தனை வெண்ணெயையும் குழந்தையிடம் கொடுத்து ஆனந்தப்பட்டார்கள்.

தொண்டர்களுக்கு முகம் சுருங்கியது.

“கேட்ட குழந்தைக்கு ஓர் எலுமிச்சங்காய் பரிமாணம் வெண்ணெய் கொடுத்தால் போதாதா? எல்லாவற்றையும் கொடுத்தாயிற்றே? அப்புறம் உதட்டில் தடவிக் கொள்ள ஏது வெண்ணெய்?”-தொண்டர்கள் தங்களுக்குள்

“ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? குழந்தை வெண்ணெய் சாப்பிட்டாலே என் உதட்டுப் புண் சரியாயிடும்..”பெரியவா

அன்று சாயங்காலமே பெரியவாள் உதட்டில் புண் இல்லை. காலையில் பார்த்த கிருஷ்ணக் குழந்தை வெண்ணெயைச் சாப்பிட்டு விட்டது போலும், ‘சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?

பரமேசுவரனே அறிவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories