spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

police award

முதல்வர் பழனிசாமி நேற்று டிஜிபி திரிபாதி, கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் உட்பட சிறப்பாக பணிபுரிந்த 604 போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

edapadi 2

சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஷங்கர் ஜிவால், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் பதக்கமும், தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தக்க பணிக்கான பதக்கமும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

police award 2

ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த அத்தி வரதர் வைபவத்தின்போது பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக டிஜிபி ஜே.கே.திரிபாதி, வடக்கு மண்டல ஐஜி வரதராஜு உள்ளிட்டோருக்கு சிறப்புப் பதக்கங் கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த விழாவில் மொத்தம் 604 போலீஸாருக்கு பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

தமிழக காவல் துறையினரின் சிறப்பான செயல் பாடுகளால், மாநிலம் முழுவதும் குற்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளன.

police award 1

மாமல்லபுரத்தில் இரு பெரும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக நமது காவல் துறையினரை பிரதமரும், சீன அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.

பொது இடங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதற்கு சென்னை மாநகரத்தில் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 789 கண்காணிப்பு கேமராக்களும், மற்ற மாவட்டங்களில் 1 லட் சத்து 79 ஆயிரத்து 949 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தீவிரவாத இயக்கங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோதச் செயல்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. அத்திவரதர் வைபவத்தின் போது சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். தமிழகத்தில் 8,427 இரண்டாம் நிலை காவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe