குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக மக்களவையிலும் நிறைவேற்றப் பட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதா விரைவில் சட்ட வடிவாக்கம்பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படும்.
இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பாதிக்கப் பட்ட கோடிக்கணக்கான மக்களின் கனவு இன்று நனவாகியிருக்கிறது… என்றுகுறிப்பிட்டுள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது போல், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில்… நம் நாட்டின் கருணை மற்றும் சகோதரத்துவ நெறிமுறைகளுக்கு இன்று முக்கிய நாள் என்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த மக்களின் துன்பத்தை இது தணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி #NarendraModi