2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல! நானாவதி கமிஷன் நற்சான்று!

Published:

modi sivaji - 2026

கோத்ரா ரயிலுக்கு பிந்தைய கலவரம் குறித்து விசாரிக்க 2002ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன், தனது அறிக்கையில் மோடி அரசுக்கு ஒரு நற்சான்று கொடுத்துள்ளது.

குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில், கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று கொடுத்துள்ளது

இந்த அறிக்கை குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் இருந்த போது 2014 இல் சமர்ப்பிக்கப்பட்டது! ஆனால் இன்று மாநில சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா இந்த அறிக்கையை சபையில் தாக்கல் செய்தார். ‘அறிவுஜீவிகள்’ முகாமின் வசைபாடல்களுக்கு மாறாக, கலவரங்கள் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையின் இரண்டாம் பகுதி. முதல் பகுதி 2008 இல் சமர்ப்பிக்கப்பட்டது ! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை உள்ளடக்கியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் “திட்டமிட்ட சதித்திட்டத்தின்” ஒரு பகுதி என்று அது முடிவுக்கு வந்தது. முதல் பகுதியும் நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்திருந்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்தக் கலவரத்தில் மாநில அரசாங்கத்தின் தொடர்பு குறித்து பல ஆண்டுகளாக பல அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அவதூறு மேற்கொள்ளத்தான் அண்மைய தி நியூ யார்க்கர் முயன்றுள்ளது.

இது குஜராத் கலவரத்தை நடத்தியவர்கள் நரேந்திர மோடி மற்றும் பாஜக பாசிஸ்டுகள் என்று ஒரு பெரிய கதைக்குள் நெசவு செய்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி டி நானாவதி மற்றும் அக்‌ஷய் மேத்தா சமர்ப்பித்த அறிக்கை அத்தகைய கட்டுக்கதைகளை முற்றிலும் குப்பைத் தொட்டியில் போடச் செய்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img