spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

- Advertisement -
subramaniam swami

நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டார் …

ஐந்து நிமிடம் தான் பேசினார் சுப்பிரமணிய சாமி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் தனி ஒருவனின பதில் தந்துவிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்…

இதற்கு பதிலடியாக டாக்டர் சுப்பிரமணிய சாமி அரசியல் சாசன சட்டப் பிரிவு 11 ஐ சுட்டிக் காட்டி,….யாருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப் பிரிவு தெளிவாக சொல்கிறது… அது என்னவென்றால்….

இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் எது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும்…. யாருக்கு குடியுரிமை தர வேண்டும் மற்றும் யாருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப் பிரிவு 11 தெளிவாக குறிப்பிட்டுள்ளது…

எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக இல்லை என்று தெளிவாக்கி உள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

படிப்பறிவில்லாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது…
1947 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளபடியே தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் அதற்கு இப்படி தான் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி

தீர்வு என்னவென்றால்…வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவரையும் வங்க தேசம் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்… அல்லது…
1947 ல் இந்தியா வழங்கிய நிலப்பரப்பில் சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவருக்கும் ஈடாக வங்க தேசம் நிலப்பரப்பை இந்தியாவிற்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று நெத்தியடி தீர்வு தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி…

மதத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

ஆனால், இந்த காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்தியாவை ஹிந்து தேசம் அறிவிக்க வில்லை. மாறாக மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார்கள்…

இந்திய தேசம் வேண்டாம் என்று இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் சென்று தங்கி விட்டு… தற்போது பாகிஸ்தான் வேண்டாம், தங்களுக்கு இந்தியா வேண்டும் என்று கேட்டால் எதற்காக பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார் சுப்பிரமணிய சாமி.

அப்படி பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உண்மையை கூறியுள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe