திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

1001382561 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திமுக வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது காவல்துறை.போலீஸ் விசாரணையில் வேட்பாளர் மருமகள் தனது கள்ளக்காதலனுடன் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்.இவர் கடந்த 14ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாத்தூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (40) என்ற நபர் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோவை சாத்தூர் நகர் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி காவல்துறையினரை தலைகிறங்க வைத்துள்ளது.

விசாரணையில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மூத்த மகனான வினோத் குமாருக்கும் அவரது மனைவி அபிநயாவுக்கும் (30) கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிநயா தனது தோழி பவானியின் கணவரான சுரேஷ் குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக தெரிகிறது.

இதனிடையே அபிநயா திருமணத்தின் போது சீர்வரிசையாக கொண்டு வந்த 35 சவரன் நகையை வேட்பாளர் கடற்கரை ராஜ் திருப்பி தர மறுத்ததால் அபிநயா, சுரேஷ்குமார் அவரது மனைவி பவானி (30)
ஆகிய 3 பேரும் ஆளில்லாத நேரத்தில் கடற்கரைராஜ் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு கூலிக்காக ஆரோக்கிய ஜான் போஸ்கோ உள்ளிட்ட 3 பேரை அழைத்து கொள்ளையில் ஈடுபட வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மருமகள் அபிநயா 30, சுரேஷ்குமார் 31,அவரது மனைவி பவானி 30, ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

மேலும் கைது செய்யப்பட்ட வேட்பாளரின் மருமகள் அபிநயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுரேஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வருவதாகவும் திருமணத்தின் போது தான் கொண்டு வந்த நகைகளை கணவர் வீட்டார் தர மறுத்ததாகவும் ஆதனால் திமுக வேட்பாளராகிய தனது மாமனாரை பழிவாங்கவே கூட்டாக சதித்திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories