சென்னை :
வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மோரா புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம் நாளை கரையைக் கடக்க உள்ளது.நாளை தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளது. இந்த நிலையில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி, எண்ணூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.