May 18, 2025, 6:20 PM
32.4 C
Chennai

சங்கரன்கோயில் ஆலயத்தில் வரும் ஆக.23ல் கும்பாபிஷேகம்!

sankarankoil kumbabishekam thirupani

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்து சைவ-வைணவ ஒருமைப்பாட்டை விளக்கும் ஆலயங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பிரபலமான தனித்துவமான சிவாலயங்கள் பல உள்ளன அதில் முக்கியமானது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகும் இங்கு இந்து மதத்தில் சைவமும் வைணவமும் ஒன்றே என்று உலகுக்கு காட்ட சிவனும் மகாவிஷ்ணுவும் சரி பாதி இணைந்த சங்கரநாராயணர் ஸ்தலம் உள்ளது.

மூலஸ்தானத்தில் சங்கரலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார் அருகில் பிரசித்தி பெற்ற அம்மன் கோமதி அம்மன் அருள் பாலிக்கின்றார்.

கோவில் சங்கரன்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ளது. மிகப் பெரிய கோபுரம், மிகப்பெரிய கட்டிடக்கலை என பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாகராஜர் சன்னிதி மிகவும் பிரபலமான தனித்துவமான சன்னிதியாகும்.

இக்கோவிலில் தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடந்தாலும், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடைபெறும் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு மிகப் பிரபலமானது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோவிலில் ஏப்.7 முதல் மூலஸ்தான பகுதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!

ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட உத்ஸவம் நடைபெறும் இக்கோவில் ஆடி தபசு திருவிழா பிரபலமானது.
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாகும். இங்கு புற்று மண் பிரசாதம் பிரபலம்.

இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோவிலில் திருப்பணிகள் முடியும் நிலையில், கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரங்கள், கல் தூண்கள் மற்றும் மூலவர் சன்னதிகள் அனைத்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories