spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

allahabad high court judges agarwal

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் பெஞ்ச், மதமாற்றங்கள் நடக்கும் இடங்களிலும், இந்திய குடிமக்களின் மதங்கள் மாற்றப்படும் மதக் கூட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியது.

“இந்த செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்த அனுமதித்தால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக இருப்பார்கள். மேலும் மதமாற்றம் மற்றும் இந்தியக் குடிமகனின் மதத்தை மாற்றும் இடங்களில் இதுபோன்ற மதக் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛ புரோபோகேசன்’ – பிரசாரம் என்ற வார்த்தைக்கு, ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை. எனவே இதுபோன்ற மதமாற்றங்கள் இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவின் அரசியலமைப்பு ஆணைக்கு எதிரானது. 

முக்கியமாக, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற பிரிவினரை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது “அதிகமான வேகத்தில்” நடப்பது பல வழக்குகளில் தனது கவனத்திற்கு வந்துள்ளது என்றும் பெஞ்ச் குறிப்பிட்டது.

ஐபிசி பிரிவு 365 & உ.பி.யின் பிரிவு 3/5(1) ஆகியவற்றின் கீழ் உ.பி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கைலாஷ் என்பவர் முன்வைத்த ஜாமீன் மனுவை நிராகரிக்கும் போது நீதிமன்றத்தால் இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் போலீசில் அளித்த புகாரில், ‛‛எனது சகோதரர் ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை கைலாஷ் என்பவர் தில்லிக்கு அழைத்துச் சென்றார். சகோதரர் வீடு திரும்பவில்லை. கைலாஷிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் தரவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரை தில்லிக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு கைலாஷ் மாற்றி உள்ளார் ” எனக்கூறி இருந்தார். 

இதனையடுத்து, ஆள்கடத்தல் மற்றும் உ.பி., மாநில மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு சிகிச்சை அளித்து, ஒரு வாரத்தில் அவரது சொந்த கிராமத்திற்குத் திரும்புவதாகத் தகவல் அளித்தவருக்கு உறுதியளித்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வகையில் விண்ணப்பதாரர் பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக கைலாஷ் எஃப்.ஐ.ஆர். பதிவானது. 

இதை அடுத்து, கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார்.

இதனையடுத்தே நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தனது உத்தரவில் இந்தக் கருத்துகளை முன்வைத்தார். மேலும், இந்த வழக்கில் ராம்பால் வீடு திரும்பவில்லை. பலர் மதமாற்றத்திற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனைத் தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர். மதமாற்றம் நடப்பதற்குக் காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அந்த உத்தரவில் நீதிபதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe