புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது
கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலீஸ்,மருத்துவத்துறை நகராட்சி தீயணைப்பு,ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு கிளப் சார்பில் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். உறுப்பினர் மணிமாறன் விஜயசுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிசினர் முத்துகணேஷ், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகனக்குமார், ரோட்டரி வருங்காலத் தலைவர் தவசீலன், நிர்வாகிகள் ராசி மூர்த்தி, தாமஸ், சத்துருசங்காரவேல்சாமி, ஐடியல் கல்விநிறுவனங்களின் தாளாளர் சேக்சுல்தான், செந்தில்குமார், ஆத்மா மதிவாணன், பொன் முத்துராமலிங்கம், தியாகராஜன், செல்வம், தீபக், சண்முகவேல், சுப்பு, ராஜா, சிவராமன், செந்தில்வேலன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டன் பிரியாணி அந்தந்த துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
![அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி! 1 rotary photo](https://i2.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/04/rotary-photo.jpg?fit=696%2C522&ssl=1)