மர்ம நபர்கள் நடிகர் மோகனாபாபுவின் வீட்டு கேட்டை உடைத்துக்கொண்டு உள்புகுந்து எச்சரித்துச் சென்றனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திரைப்பட நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில் பதற்றம் நிலவியது.
வெளியான செய்திகளின்படி, மர்ம நபர்கள் சிலர் எம்.யூ.வி வாகனத்தில் ஷம்ஷாபாத்தில் உள்ள மோகன்பாபுவின் பங்களா வீட்டிற்குள் பலவந்தமாக அத்துமீறி நுழைந்து மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடையாளம் தெரியாத சிலர் ஷம்ஷாபாத் ஜல்லப்பள்ளியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது வீட்டின் காவலாளி எச்சரிக்கையாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஏபி 31 ஏஎன் 0004 டொயோட்டா இன்னோவா காரில் சுமார் நான்கு பேர் மோகன் பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவரை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நாங்கள் உங்களை விடமாட்டோம்” என்று குற்றவாளிகள் கத்தினார்கள்.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து இந்த எதிர்பாராத எச்சரிக்கை மோகன் பாபுவின் வீட்டில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நடிகரின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் பஹதிஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மோகன் பாபுவுக்கு இந்த எச்சரிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தேடி வருகின்றனர். நடிகர், கல்வியாளர், அரசியல்வாதியான மோகன்பாபுவை எச்சரிக்க வேண்டிய அவசியம் யாருக்கு உள்ளது என்பது குறித்து ஆராயப்படுகிறது. இது வேடிக்கைக்காக செய்தவர்களா அல்லது இது கடுமையான அச்சுறுத்தலா என்பதும் கண்டறியப்பட வேண்டியுள்ளது.