இப்போது நாம் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் முடங்கிக் கிடக்கிறோம். இதுதொடர்பாக பரவி வரும் செய்திகளால் பலருக்கும் வைரஸ் தொற்று குறித்த பயமும் பீதியும் ஏற்பட்டிருக்கிறது
இந்நிலையில் இறைவழிபாடும் கூடவே நோய் எதிர்ப்புசக்தி மருந்துகளும் எடுத்துக்கொண்டு நம்மை நாம் ஆசார நிஷ்டையுடன், அதாவது சமூக விலகலை கடைபிடித்து இந்த பிரார்த்தனைகளுடன் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது
இறைவனின் வழிபாடு போலவே இறைவனின் ஆயுதங்களுக்கான வழிபாடுகளும் நம் ஹிந்து மதத்தில் புகழ்பெற்றவை தான். கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் … நாம் இறைவனின் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு இறைவனையே நம்மை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். ஆயுதங்கள் எல்லாம் ஆண்டவனின் கையில்தான் உள்ளன என்று குறிப்பிடுகிறார்
அந்தவகையில் முருகப்பெருமானின் வழிபாடு போல் வேல் வழிபாடு மிகவும் புகழ்பெற்றது. அம்பிகையின் வழிபாட்டுக்கு ஏற்ப சக்தி சூல வழிபாடும் புகழ்பெற்றது தான். பகவான் விஷ்ணு கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தையும் வழிபடுவோர் பலர். விஷ்ணு ஆலயங்களில் சுதர்சன சக்கரத்திற்கு என்று தனி சந்நிதி அமையப்பெற்று சக்கரத்தாழ்வார் என்ற குறிப்புடன் வழிபாடு நடைபெற்று வருகிறது .
பில்லி சூனியம் ஏவல் முதலிய துர் சக்திகள் அகல, வீழ்த்தப்பட சுதர்சன வழிபாடும் சுதர்சன ஹோமம் முதலியவைகளும் நடத்தப்படுகின்றன. அதுபோல் நம் உடலில் ஓடும் வாத பித்த கப எனும் மூன்று நாடிகளும் சுத்தமாகவும் அவற்றில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கவும் கீழ்காணும் மந்திரத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள்
நாம் மருந்து உண்டாலும். மந்திரம் உண்டானால் இரண்டும் சேர்ந்து இனிமை கூட்டும்! இது வியாதிகளை குணப்படுத்தும் தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய |
ஸர்வ ஆமய நாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம : ||
இது ஸர்வ ரோஹ நிவாரண – சுதர்ஸன மந்திரம்
ஓம் நமோ பகவதே சுதர்ஸனாய
ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய
மகா சக்ராய மகா ஜ்வாலாய
சர்வரோக ப்ரசமனாய
கர்ம பந்த விமோசனாய
பாதாதி மஸ்த பர்யந்தம்
வாத ஜனித ரோஹான்
பித்த ஜனித ரோஹான்
ச்லேஷ்ம ஜனித ரோஹான்
தாது சங்கலிகோத்பவ நாநாவிகார ரோஹான் நாசய நாசய|
ப்ரச்மய ப்ரச்மய
ஆரோக்யம் தேஹி தேஹி ||
ஓம் ஸஹஸ்ரார ஹும்பட் ஸ்வாஹா||