வரலட்சுமி, ஆத்மிகா மற்றும் சோனம் பாஜ்வா ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தமிழில் உருவாகவுள்ளது.
யாமிருக்க பயமே என்ற படத்தை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கவுள்ளார். காமெடி மற்றும் ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.