‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

hinduism - 2026

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, இது நாட்டில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் இருப்பதாகக் கூறுகிறது என்று பிரதமருக்கான ஆலோசனைக் குழு (EAC-PM) பொருளாதாரத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1950க்கும், 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மதச் சிறுபான்மையினரின் பங்கு – ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015) என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஷாமிகா ரவி தலைமையிலான இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 1950 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15% அதிகரித்துள்ளது.

சரியும் ஹிந்துக்களின் எண்ணிக்கை

இந்திய மக்கள்தொகையில், 1950ல் 84.68 ஆக இருந்து இந்துக்களின் சதவீதம், 2015ல் 78.06 ஆக குறைந்துள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கணிசமாக உயரும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை

1950ல் 9.84 ஆக இருந்த இஸ்லாமியர்களின் சதவீதம், 2015ல் 14.09 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், 1950ல் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் சதவீதம், 2015ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. இது 5.38% உயர்வாகும்.

1950ல் 1.24% இருந்த சீக்கியர்கள், 2015ல் 1.85% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இது 6.58% உயர்வு ஆகும்.

சரிவு காணும் சமணர், பார்ஸிகளின் எண்ணிக்கை

சமணர்கள் மற்றும் பார்சிக்களின் சதவீதம் குறைந்துள்ளது. 1950ல் 0.45% ஆக இருந்த சமணர்களின் எண்ணிக்கை, 2015ல் 0.36% ஆக குறைந்துள்ளது. 1950ல் 0.03% ஆக இருந்த பார்சிக்கள், 2015ல் 0.004% ஆக இருக்கிறார்கள். இது 85% சரிவு.

சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும், அதை ஒட்டி இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7.82% குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் உள்ளதைக் காட்டுகிறது. அதேநேரம், சாதகமற்ற பிரிவினருக்கு ஏற்ற சூழலையும், ஆதரவையும், கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் முடிய வழங்காத வரை அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கொள்கை நடவடிக்கைகள், அரசியல் முடிவுகள், சமூக செயல்பாடு ஆகிய அனைத்தும் சமூகத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு ஏற்ப இருக்கிறது என்பதையே, பெரும்பான்மை மக்கள்தொகை குறைவு மற்றும் சிறுபான்மை மக்கள் தொகை அதிகரிப்பு காட்டுகிறது.

அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை. பெரும்பான்மை மக்கள் தொகை குறைவதும், சிறுபான்மை மக்கள் தொகை உயர்வதும் உலகலாவிய போக்காக உள்ள போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை.

இந்த நாடுகளில், பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் சுருங்கியுள்ளது.

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத இந்தியா, மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக 1950 ஆம் ஆண்டு ஒரு அடிப்படை ஆண்டாக முக்கியமானது என்று அறிக்கை குறிப்பிட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பானது சிறுபான்மை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான அரசின் பொறுப்புடன் சர்வதேச சட்டத்தில் முக்கிய நீரோட்டத்துடன் வடிவம் பெறத் தொடங்கிய நேரத்தில் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

1950 மற்றும் 2015 க்கு இடையில் 65 ஆண்டுகளில் ஒரு நாட்டின் மக்கள்தொகையில் மாறிவரும் பங்கின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்த விரிவான குறுக்கு-நாடு விளக்க பகுப்பாய்வு ஆகும்.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 167 நாடுகளுக்கு, 1950 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டில் பெரும்பான்மை மதப் பிரிவின் பங்கின் சராசரி மதிப்பு 75 சதவிகிதம் ஆகும், அதே சமயம் 1950 மற்றும் 2015 க்கு இடையில் பெரும்பான்மை மதப் பிரிவின் மாற்றத்தைக் கைப்பற்றும் விநியோகத்தின் சராசரி மதிப்பு 21.9 ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories